விசாகபட்டினம்: சென்னை அணிக்கு 148 ரன்களை வெற்றி இலக்காக டெல்லி அணி நிர்ணயித்துள்ளது. டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்று சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி விசாகபட்டினம் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்துள்ளது. 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கவுள்ளது.