×

பாகிஸ்தான் வழியாக இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி புகுந்த சரக்கு விமானம்: இந்திய விமானப்படை விசாரணை

ராஜஸ்தான்: பாகிஸ்தான் வழியாக இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி புகுந்த சரக்கு விமானம் மடக்கிப் பிடிக்கப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து வந்த ஏ.என் 12 என்ற சரக்கு விமானம் ராஜஸ்தானுக்குள் நுழைந்தது. பாகிஸ்தானில் இருந்து வந்த விமானத்தை இந்திய விமானப்படை விமானங்கள் வழிமறித்து ஜெய்ப்பூரில் தரையிறக்கின. பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு சரக்கு விமானம் வந்தது ஏன் என்று இந்திய விமானப்படை விசாரணை நடத்துகிறது.

முன்னதாக இன்று ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய எல்லைப் பகுதியான காஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : investigation ,Indian Air Force ,Pakistan ,Indian , Indian Air Force, Investigation, Pakistan, Cargo plane
× RELATED ராஜஸ்தான் அருகே இந்திய...