×

ஐதராபாத் இளைஞர் மர்ம நபரால் லண்டனில் குத்தி கொலை: போலீசார் விசாரணை

லண்டண்: லண்டனில் உள்ள வணிகவளாகம் ஒன்றில் வேலை பார்த்த ஐதராபாத் இளைஞர் மர்ம நபரால் குத்தி கொலைசெய்யப்பட்டார். ஐதராபாத்தை சேர்ந்த முகமது நதீமுதின் கடந்த 6 ஆண்டுகளாக லண்டனில் வசித்தபடி டெஸ்கோ சூப்பர்மார்க்கெட் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அண்மையில் நதீமுதினை தொடர்பு கொண்ட அவரது பெற்றோர், அவரிடம் பேச நீண்ட நேரம் முயற்சித்துள்ளனர். ஆனால் மகனுடன் பேச முடியாததால், அவர் வேலை பார்த்த வணிக வளாகத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.

அதன்பின் அங்கிருந்த ஊழியர்கள் அவரை தேடியபோது, வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நதீமுதின் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் லண்டன் சென்று மகனின் உடலை பார்ப்பதற்கான உதவிகளை செய்துதரும்படி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கொலைக்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனா்.


Tags : Hyderabad , Hyderabad person,murder,london,police investigation
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்