×

மாணவர்களின் பாச போராட்டத்தால் புகழ்பெற்ற ஆசிரியர் பகவான் மீது மணப்பெண் வீட்டார் போலீசில் புகார்

திருத்தணி: மாணவர்களின் பாச போராட்டத்தால் புகழ்பெற்ற ஆசிரியர் பகவான் மீது மணப்பெண் வீட்டார் போலீசில் புகார் அளித்துள்ளனர். பகவான் திருத்தணி அடுத்துள்ள வெள்ளியகரம் அரசுக்கு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவருகிறார். மாணவர்களின் போராட்டத்தால் ஆசிரியர் பகவானின் இடமாறுதலை கடந்த ஜூன் மாதம் ரத்து செய்தது. இவருக்கு வரும் 19ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. நிச்சியமான பெண் திடீரென ஆசிரியர் பகவானை மணக்க மறுத்ததால் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து இவர் மீது மணப்பெண் வீட்டார் போலீசில் புகார் அளித்ததையடுத்து பகவானிடம் காலை முதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : teacher ,bride , Teacher Lord, bride's house, complained
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...