×

கடைசி 3 மணி நேரத்தில் விமான முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு கட்டணங்களில் சலுகை வழங்க ஏர் இந்தியா முடிவு

மும்பை: இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா கடைசி நிமிட பயணிகளுக்கு  பயண கட்டணங்களை குறைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி விமானம் புறப்படுவதற்கு கடைசி 3 மணி நேரத்தில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு விமான பயண கட்டணங்களில் சலுகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு நிமிட முன்பதிவு என்ற இந்த சலுகையில் 50 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று விமான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு கடைசி நிமிடத்தில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு பயண கட்டணத்தில் 40% வரை அதிகமாக வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியாவின் இந்த சலுகையில் அவசர பயணங்களுக்கு பயணம் செய்பவர்கள் அதிகம் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற வர்த்தக மறு ஆய்வு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. சராசரியாக கடைசி நிமிட முன்பதிவு வாடிக்கையாளர்கள் 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக அல்லது அதற்கு மேலானவர்களாக உள்ளனர்.

இப்போது கடைசி நிமிட பயணிகள், குறிப்பாக அவசர பயணங்களுக்கு பயணம் செய்பவர்கள், மிக குறைந்த கட்டணத்தில் டிக்கெட் புக் செய்யலாம் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. டிக்கெட்களை ஏர் இந்தியா கவுண்டர்கள், இணையதளம், மொபைல் ஆப் அல்லது முகவர்கள் மூலம் பதிவு செய்யலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Air India ,passengers , Air India, offer
× RELATED விமானப்பணி நேர வரம்புகளை மீறிய...