×

கஜா புயல் நிவாரணம் கோரி போராடிய 140 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை : உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : கஜா புயலால் பாதிப்பு காரணமாக நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதில் பலர் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை இழந்தனர். இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்த இனியவன் உள்ளிட்ட நூறுக்கு மேற்பட்டவர்கள் நிவாரணம் கேட்டு போராடினர். அப்போது அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி 140க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தற்போது வேதாரண்யம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் நியாயமான முறையில் நியாயம் கேட்டதற்கு தங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. எனவே வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன் நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.


Tags : trial ,storm fighting ,Supreme Court ,Ghazan , Gajah Storm, relief, struggle, high court
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...