×

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் தீவிரவாதி சுட்டுக் கொலை

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சோபியான் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியைச் சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளை நோக்கி தாக்குதல் நடத்தினர்.

பதிலுக்கு தீவிரவாதிகளும் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சண்டையில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் அவன் வசம் இருந்த ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ஜம்மு - காஷ்மீரில் 41 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக கடந்த புதன்கிழமை ராணுவம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இன்று மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


Tags : security forces ,Kashmir ,Jammu , Jammu - Kashmir, terrorists, Pulwama attack, terrorist
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...