×

பாகிஸ்தான் கடற்படை கைது செய்த 34 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: இந்திய மீனவர்கள் 34 பேர் அரபிக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது எல்லையைத் தாண்டி வந்ததாக பாகிஸ்தான் கடற்படையினர் 34 மீனவர்களை கைது செய்து சென்று நீதிமன்றக் காவலில் அடைத்திருப்பதும், அவர்களின் 6 படகுகளை  பறிமுதல் செய்து சென்றதும் ஏற்புடையதல்ல. எனவே, மத்திய அரசு பாகிஸ்தானோடு தொடர்பு கொண்டு நமது மீனவர்களையும், படகுகளையும் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமல்ல இனிமேல் இந்திய மீனவர்கள் தவறுதலாக எல்லை தாண்டினால் அவர்களை கைது செய்யவோ, படகுகளை பறிமுதல் செய்யவோ கூடாது என்பதையும் மத்திய அரசு அழுத்தத்தோடு தெரிவிக்க வேண்டும்.

குறிப்பாக மத்திய அரசு - நமது நாட்டு மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு தேவையான சாதனங்கள், தொழில் நுட்ப கருவிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், கடல் எல்லைப்பகுதியில் கண்காணிப்புக்காக ரோந்துப்பணிகளில் உண்மை நிலைக்கு ஏற்ப  செயல்பட கடற்படையினருக்கு உத்தரவிடுதல் என பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து மீனவர்களின் மீன்பிடித்தொழிலுக்கு முழு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். மத்திய அரசு மீனவர்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக  தொடர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.



Tags : navy ,Pakistani ,fishermen ,government ,GK Vasan , Pakistan, Navy, arrested,, GK Vasan
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக...