×

இமாச்சல பிரதேசத்தில் நாளை மோடி, ராகுல் பிரசாரம் நடக்குமா?

இமாச்சல பிரதேசத்தில் 4 தொகுதிகளுக்கு 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இந்த மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை பிரசாரம் செய்ய  உள்ளனர்.
மாண்டி மாவட்டத்தில் ேஜாகிந்தர் நகர் தொகுதியில் தற்போதைய எம்பி.யும் பாஜ வேட்பாளருமான ராம்ஸ்வரூப் சர்மாவை ஆதரித்து மோடி பிரசாரம் செய்கிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் சுக்ராமின் பேரனும், இமாச்சல பிரதேச பாஜ எம்எல்ஏ அனில் சர்மாவின் மகனுமான அஷ்ராம் சர்மா போட்டியிடுகிறார். இதேபோல் யுனா, மாண்டி பகுதிகளில்  நடக்கும் பிரசாரத்தில் ராகுல், பிரியங்கா கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், நாளையும், நாளை மறுநாளும் இமாச்சல பிரதேசத்தில் மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. சூறைக்காற்று வீசும், ஆலங்கட்டி மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என தெரிவித்துள்ளது.  மோசமான வானிலை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால், மோடி மற்றும் ராகுலின் அனல் பறக்கும் பிரசாரத்துக்கு மழை எச்சரிக்கையால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.


Tags : Rahul ,campaign ,Himachal Pradesh , Tomorrow , Himachal Pradesh, Modi ,Rahul
× RELATED தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரியங்கா...