×

தேர்தல் ஆணையத்தை குறை கூறியதற்கு முந்திரிக்கொட்டைபோல் முதல்வர் பேசியதால் சந்தேகம்: முத்தரசன் பேட்டி

கரூர்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கரூரில் நேற்று அளித்த பேட்டி: தேர்தல் ஆணையம் தன்னிச்சையான ஒரு அமைப்பு. தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சியினர் புகார் கூறி வருகின்றனர். அதற்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் பதில் அளிக்காத நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முந்திரிக்கொட்டை போல முந்திக்கொண்டு பேசியுள்ளார்.

இவரது துறை பற்றி நாங்கள் பேசாதபோது இவர் ஏன் பதில் சொல்கிறார். ஆளும் கட்சிகளுக்கு ஆதரவாக ஆணையம் செயல்படுகிறதோ என்ற ஐயப்பாடு ஏற்படுகிறது. அனைத்து இடைத் தேர்தல்களிலும் திமுக வெற்றிபெறும் என்பதால் ஆட்சியைக் காப்பாற்ற 3எம்எல்ஏக்களை தகுதி நீக்க கொறடா மூலமாக நடவடிக்கை எடுத்துள்ளனர். எம்பி எம்எல்ஏ தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் மோடி மற்றும் எடப்பாடி அரசுகள் நீடிக்க வாய்ப்பில்லை.
இவ்வாறு முத்தரசன் கூறினார்.

Tags : Chief Minister ,EC ,interview ,Muthrasanan ,questioning , Election Commission, Corrupted, Annual Report, Chief Minister, Suspect, Muthuraman interview
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...