×

தேனி தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தேவையில்லை: தங்கதமிழ்செல்வன் பேட்டி

திருப்பரங்குன்றம்: நன்றாகவே தேர்தல் நடந்த நிலையில், தேனியில் 2 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தேவையில்லை என்று தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். மதுரை, திருப்பரங்குன்றத்தில் அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

அதிமுக அமைச்சர்கள் பேசுவது தேவையற்ற பேச்சு. எடப்பாடி ஆட்சிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசுக்கு எதிராகத்தான் வாக்களிப்போம். எடப்பாடி எங்களது துரோகி. தேனி தொகுதியில் நன்றாகவே தேர்தல் நடந்த நிலையில் 2 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது தேவையற்றது. திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு தாராளமாக பணத்தை வாரி இறைத்து வருகின்றனர்.தேர்தல் முடிவு இப்போதே தெரிந்ததால் அதிமுகவினர் இறுகிய முகத்தோடு இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Theni ,polling booths ,interview ,Ponthammymelvelvan , Theni Volume, 2 Pollachi, Reconciliation, No Need, Ponthammeelchalvan
× RELATED வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்