அமெரிக்கா: அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் குறுகிய தூரம் பயணிக்க கூடிய 2 ஏவுகணைகளை ஏவி வடகொரியா மீண்டும் சோதனை நடத்தி உள்ளது. அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து மீண்டும் ஆயுத சோதனைகளில் வடகொரிய தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
கடந்த சனிக்கிழமையன்று வடகொரியாவின் கிழக்கு கடற்கரையில் இருந்து பல ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தற்போது தலைநகர் பியோங்யாங்கில் உள்ள சினோரி என்ற இடத்தில் இருந்து இரண்டு குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை ஏவி வடகொரிய சோதனை செய்துள்ளது.