×

வெயில் வாட்டி வந்த நிலையில் தமிழகத்தின் சில இடங்களில் மழை..: பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்து வருகிறது. கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில் மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல், ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்திலும் மழை பெய்து வருகிறது. மேலும் வேலூர் மாவட்டம் சோளிங்கர், அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை பெய்து வருகிறது.


Tags : places ,Tamil Nadu , sunny, Tamil Nadu, rain
× RELATED தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள்...