×

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவதற்கு அதிர்ஷ்டம் வேண்டும்: கபில் தேவ்

டெல்லி: உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவதற்கு அதிர்ஷ்டம் வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய அவர், இந்திய அணியில் இளைய வீரர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களின் கலவை சரிசமமாக உள்ளதாகக் குறிப்பிட்டார். நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன், கோலியும், தோனியும் அணியில் உள்ளதாக கபில் தேவ் கூறினார்.

கோலியும், தோனியும் இந்திய அணியின் வெற்றிக்காக நிறையவே உழைத்திருப்பதாக தெரிவித்த அவர், உலகக்கோப்பை அரை இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெறுவது உறுதி எனத் தெரிவித்தார். ஆனால் இறுதிப் போட்டிக்கு முன்னேற அதிர்ஷ்டமும், அணியின் கூட்டு முயற்சியும் தேவை என கபில் தேவ் குறிப்பிட்டார்.

Tags : Kapil Dev ,final ,World Cup , Kapil Dev,luck , World Cup ,final
× RELATED மறக்குமா நெஞ்சம்; இதே நாளில் 28...