×

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கான இ- டிக்கெட்டுகள் 120 நொடிகளில் விற்றதால் ரசிகர்கள் அதிருப்தி

ஐதராபாத்: ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கான இ- டிக்கெட்டுகள் 120 நொடிகளில் விற்றுத் தீர்ந்து விட்டதாகக் கூறப்படும் நிலையில், கள்ளச்சந்தைக்கு வழிவகுத்து கொடுத்திருப்பதாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் வரும் 12-ம் தேதி ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்க உள்ளது. அந்த மைதானத்தில் 39 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கை வசதி உள்ளது என கூறப்படுகிறது. மேலும் ஆயிரம் ரூபாய் தொடங்கி 22 ஆயிரம் ரூபாய் வரை 9 வகையிலான டிக்கெட்டுகள் உள்ளன.

இ-டிக்கெட் விற்பனையானது ஈவெண்ட்ஸ் நவ் என்ற தனியார் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டது. செவ்வாய்க் கிழமை அன்று அந்த நிறுவனம் இ-டிக்கெட் விற்பனையை தொடங்கிய 2 நிமிடங்களில், அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டதாக அறிவித்துள்ளது. இது ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் கள்ளச்சந்தை நுழைந்திருப்பதாக ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags : teams ,Fans ,cricket final , ipl teams,Fans, dissatisfied,e-tickets,cricket final,120 seconds
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல்; நாமக்கல்...