×

ஆட்டோ எரிந்து நாசம்

அண்ணாநகர்: அரும்பாக்கம் எம்எம்டிஏ பகுதியை சேர்ந்த மனோகரன், ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர், நேற்று  மாலை வீட்டின் அருகே உள்ள இடத்தில் தனது ஆட்டோவை நிறுத்தி இருந்தார். இந்த ஆட்டோ தீடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடிவந்த மனோகரன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றார். ஆனால், முடியவில்லை. இதையடுத்து கோயம்பேடு  தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். வீரர்கள் விரைந்து வந்தனர். ஆனால், அதற்குள் ஆட்டோ முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மின்பெட்டி இருந்த பகுதியில் ஆட்டோ நிறுத்தி இருந்ததால் மின் கசிவு காரணமாக ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததா அல்லது மர்ம நபர்கள் ஆட்டோவை தீ வைத்து எரித்தனரா என விசாரிக்கின்றனர்….

The post ஆட்டோ எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Annagar ,Manokaran ,Arumbakkam MMDA ,Nasam ,Dinakaran ,
× RELATED கே.பி.கே.ஜெயக்குமாரும், நானும்...