×

புனேவில் ஜவுளி குடோனில் பயங்கர தீவிபத்து: 4 தொழிலாளர்கள் உடல்கருகி பலி

புனே: புனேவில் உள்ள ஜவுளி குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உருளி தேவச்சி கிராமத்தில் அமைந்துள்ள ஜவுளி குடோனில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் 5 தொழிலாளர்கள் தீயில் கருகி பலியாகினர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிபத்தின்போது குடோனில் உள்ள அறையில் தொழிலாளர்கள் ஓய்வெடுத்து கொண்டிருந்த போது தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் தொழிலாளர்கள் 5 பேரும் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர்.  தீவிபத்திற்கான காரணம் வெளியாகவில்லை. தீவிபத்து குறித்து அப்பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags : fire ,Pune , Cloth Godown, Pune
× RELATED ஆம்பூர் தீ விபத்து: 5,000 கோழிகள் உயிரிழப்பு