×

ரவுடியை வெட்டிய 2 பேர் சிக்கினர்

அண்ணா நகர்: சென்னை அண்ணா நகரை சேர்ந்த பிரபல ரவுடியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணாநகர் சத்ய நகர் 9வது தெருவை சேர்ந்தவர் ராஜா (எ) காட்டு ராஜா (28). பிரபல ரவுடி. கடந்த திங்கட்கிழமை ராஜா வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் திடீரென ராஜாவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். பலத்த காயத்துடன் ராஜா அலறி துடித்தார். இதை பார்த்ததும் சக நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ராஜாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர்.

புகாரின்பேரில் அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் ராஜாவை வெட்டியவர்கள் சென்னை- நியூ ஆவடி சாலை வழியாக நடந்து செல்வதாக அண்ணா நகர்  போலீசாருக்கு நேற்று முந்தினம் ரகசிய தகவல் கிடைத்து. தனிப்படை போலீசார், விரைந்து சென்று 2 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அண்ணா நகர், சத்ய நகரை சேர்ந்த ராஜதுரை (25), மணிகண்டன் (26) என்பதும், முன்விரோதம் காரணமாக ராஜாவை வெட்டியதும் தெரிந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  புழல் சிறையில் அடைத்தனர். ரவுடி ராஜா மீது ஐசிஎப் காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Rowdy , Rowdy, 2 people ,trapped
× RELATED குண்டர் சட்டத்தில் ரவுடி கைது