×

நங்கநல்லூரில் 3 இடங்களில் கைவரிசை கோயில் உண்டியல் கொள்ளை

ஆலந்தூர்: நங்கநல்லூர், மூவரசன்பட்டு பிரதான சாலையில்  வல்லப விநாயகர் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்து பூசாரி குருமூர்த்தி கோயிலை பூட்டிவிட்டு வீடு திரும்பினார்.நேற்று காலை குருமூர்த்தி கோயிலை திறக்க வந்தபோது கோயிலின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியானார். உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது  தெரிந்தது. புகாரின்பேரில் மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேப்போல் இந்த கோயிலுக்கு அருகே உள்ள கங்கையம்மன் கோயில் உண்டியலையும் மர்ம நபர்கள் உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் ஆலய கருவறையில் இருந்த பெட்டியை உடைத்து பித்தளை  நகைகள், பூஜை பொருட்கள் மற்றும் துணிமணிகளை எடுத்து சென்றுள்ளனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு உள்ளகரம்-மேடவாக்கம் சாலையில் உள்ள பிரசித்தி பாதாள விக்னேஸ்வரர் கோயிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அங்கு மக்கள் திரண்டதால்  கொள்ளையை கைவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இதுகுறித்து பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



Tags : places ,Nanganallur , Handwriting, Nanganallur, Temple bill ,robbery
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்