×

கண் ஆபரேஷனுக்கு ஆட்டோவில் வந்தபோது பெண்ணிடம் 20 ஆயிரம் பறிப்பு : பைக் ஆசாமிகளுக்கு வலை

சென்னை: மேற்கு வங்கம் பன்குரா பகுதியை சேர்ந்தவர் சிபானி மண்டி (55). ெசன்னை எழும்பூரில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய ரயில் மூலம் ேநற்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரயில்  நிலையத்திற்கு வந்தார். பின்னர் ஆட்டோவில் எழும்பூரில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். ஆட்டோ எழும்பூரில் உள்ள காந்தி இர்வின் பாலத்தின் மேல் செல்லும் போது, பின்னால் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 3 நபர்களில் ஒருவர், ஆட்டோவில் சென்று கொண்டிருந்த சிபானி மண்டி வைத்திருந்த கைப்பையை பறித்துக்கொண்டு  மாயமாகிவிட்டார். அந்த பையில் சிகிச்சைக்காக கொண்டு வந்த ₹20 ஆயிரம் பணம் மற்றும் 3 ஏடிஎம் கார்டுகள் இருந்தன.

இதை சற்றும் எதிர்பார்க்காத சிபானி மண்டி உடனே பெரியமேடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று பைக்கில் தப்பி சென்ற வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும், ஆட்டோ டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : lady , eye, auto, woman,bike guys
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகள்...