×

குவைத் ஏர்போர்ட்டில் பரிதாபம் விமான டயரில் சிக்கி கேரள ஊழியர் பலி

குவைத்: குவைத்தில் விமானத்தை இழுத்துச் செல்லும் பணியின்போது அதன் டயரில் சிக்கி கேரளாவை சேர்ந்த ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த் ராமச்சந்திரன். குவைத் நகர விமான நிலையத்தில் உள்ள குவைத் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த திங்கட்கிழமை மதியம், இவர் தனது நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானத்தை 4வது முனையத்துக்கு இழுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது, எதிர்பாராத விதமாக அந்த விமான டயரில் சிக்கி ராமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு சோபியா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு திருவனந்தபுரத்துக்கு அனுப்பப்படுகிறது. விமான நிலையத்தில் விமானத்தை ஒரு முனையத்தில் இருந்து மற்றொரு முனையத்துக்கு கொண்டு செல்ல இழுத்துச் செல்லப்படுகிறது.

இது மிகவும் ஆபத்தான பணி என கூறப்படுகிறது. இதனால், விமானத்தை இழுத்துச் செல்வதற்கு முன் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல கடைப்பிடிக்கப்படுகின்றன. இருப்பினும், இந்த பணியின்போது இந்தியர் விமான டயரில் சிக்கி இறந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Tags : Kerala ,victims ,airports ,Kuwait , Kuwait Airport, Awful, Flight Tire, Kerala employee, kills
× RELATED இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான...