×

லோடு ஆட்டோ திருடியவர் கைது

பூந்தமல்லி: நெசப்பாக்கம், ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் துரை (38). இவர், சொந்தமாக லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனது ஆட்டோவை போரூர் அருகே நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நள்ளிரவில் தனது செல்போனுக்கு வாகனம் செங்கல்பட்டு சுங்கச்சாவடியை கடந்து சென்றதாகவும், பாஸ்டாக் ஆப்பில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்தது. இதையடுத்து துரை, செங்கல்பட்டு சுங்கச்சாவடியை கடந்து வாகனம் வருவதை அறிந்து, விரட்டி சென்று மறைமலைநகர் அருகே, தனது ஆட்டோவை ஓட்டிச்சென்ற நபரை மடக்கி பிடித்து போரூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.  விசாரணையில் திருப்பூரை சேர்ந்த வேணுகோபால் (55), என்பதும், இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்….

The post லோடு ஆட்டோ திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Lodu ,Poonthamalli ,Nezapakam ,Rajivkandi ,Durai ,Lode Auto Driver ,Lode Auto ,Dinakaran ,
× RELATED போனில் மனைவியுடன் தகராறு: கணவன் தூக்கிட்டு தற்கொலை