சென்னை,மே 9: காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த தமிழக ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகளின் தாக்குதலால் வீர மரணமடைந்த 40 வீரர்களில் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், சீவலப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியம், அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவசந்திரன் ஆகியோரின் குடும்பங்களுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.