மதுரை: திருச்சி மாவட்டம் குணசீலம் மஞ்சக்கோரை பகுதியில் தமிழக அரசு மணல் குவாரி அமைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது. மணல் குவாரி அமைத்தால், விவசாயம் பொய்த்துப் போவதோடு நிலத்தடி நீர்மட்டம் இல்லாத நிலை உருவாகும் அபாயம் ஏற்படும் என திருச்சி முசிறியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.