×

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: திருநங்கை பாரதிகண்ணம்மா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை

மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, திருநங்கை பாரதிகண்ணம்மா தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. மதுரையைச் சேர்ந்த திருநங்கை பாரதி கண்ணம்மா திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 23-ம் தேதி திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். சுயேச்சையாகப் போட்டியிட பாரதி கண்ணம்மாவின் வேட்புமனு சரியாக முன்மொழியப்படாத காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து திருநங்கை பாரதிகண்ணம்மா தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tiruparankundam ,High Court ,Tribunal Bharathikannamma , Tiruparankundam,withdraws case,Tirunanki Bharathiakannam ,mid-afternoon, High court Madurai
× RELATED குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால்,...