×

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின், தாண்டேவாடா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின், தாண்டேவாடாவில் மாவட்டத்தின் கோண்டேராஜ் வனப்பகுதியில், மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாகக் காவல் துறையினருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, இன்று காலை 5 மணியளவில் அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்குப் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரைக் கண்டதும், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். பதில் தாக்குதலில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர், 2 மாவோயிஸ்டுகளைச் சுட்டுக் கொன்றனர். மேலும், அவர்கள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து கைத்துப்பாக்கிகள், 12 பேர் ஆயுதங்கள் மற்றும் கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளை அடையாளம் காணும் பணியும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maoists ,Chhattisgarh , Chhattisgarh, security force, firing, Maoist,
× RELATED வயநாடு தொகுதி மக்களை...