சென்னை: தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி மீது பொய்யான செய்தி பரப்பிய மோடியை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் அஸ்வத்தாமன் தலைமை வகித்தார். பிரதமர் மோடியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் காங்கிரஸ் எஸ்சி பிரிவு நிர்வாகி முத்துநேசன், மாணவர் காங்கிரஸ் திருவள்ளூர் மாவட்ட தலைவர் அச்சுதன், துணை தலைவர் நரேஷ்குமார், பொதுச்செயலாளர் இன்பரசன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி