×

அதிக இடங்களில் பாஜ வெற்றி பெறும்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

சென்னை. மே 8: பாஜ அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: டெல்லி, வாரணாசி பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய செல்கிறேன். எல்லா இடங்களிலும் பா.ஜ. கட்சிக்கு நல்ல சூழ்நிலை நிலவுகிறது. சில  கருத்துக்கணிப்புகள் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்த முயல்கின்றன.

எந்தவிதத்திலும் பாதிப்பு இல்லாமல் பா.ஜ. கடந்த முறை வென்ற  இடங்களைவிட அதிக இடங்களில் வெற்றி பெறும் என்பதுதான் களநிலவரமாக உள்ளது. இதனால்தான் ராகுல்காந்தி போன்றவர்கள் நாகரீகமற்ற  பிரசாரத்தை செய்கின்றனர்.  தமிழகத்தில் நடக்கும் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெறும். தமிழகத்தில்  4 தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலில் வட இந்திய பிரசாரத்தை முடித்துக் கொண்டு 11ம் தேதியில் இருந்து 17ம் தேதி வரை  பிரசாரம் செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bhajan ,places ,interview ,Tamil Nadu Soundararjan , BJP, Success, Tamilnadu Soundararajan, interview
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்