×

சரிதா நாயரை கொல்ல முயற்சி

திருவனந்தபுரம்: கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சோலார் பேனல் மற்றும் காற்றாலை அமைத்து தருவதாக கூறி பலரை ஏமாற்றி  கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் கேரள மாநிலம் செங்கணூரைச் சேர்ந்த சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். பல மாத சிறை  தண்டனைக்கு பின்னர் தற்போது அவர் ஜாமீனில் உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு இவர் கொச்சி அருகே காரில் சென்றுக் கொண்டிருந்தார். சக்கரபரம்பு பகுதியில் சென்றபோது பைக்களில்  வந்த ஒரு கும்பல் இவரது காரை வழிமறித்து சேதப்படுத்தி அவரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் பாலாரிவட்டம்  போலீசில் புகார் செய்தார்.

அந்த புகாரில், ‘‘மர்மநபர்கள் வந்த பைக் உத்தரப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டது. என்னை கொல்வதற்காகவே அவர்கள் வந்துள்ளனர். எனவே  எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார். புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் பிரதமர் வேட்பாளரான ராகுல்காந்தியை எதிர்த்து ேதர்தலில் போட்டியிடும்  சரிதாநாயரை கொல்ல முயன்ற சம்பவம் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Naira Nair , Correct Nair, try to kill
× RELATED ஆந்திர மாநில புதிய டிஜிபி பொறுப்பேற்பு