உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மக்களவை தொகுதியில் தனது தாயார் மேனகா காந்திக்கு ஆதரவாக வருண்காந்தி பிரசாரத்தில் பேசியதாவது: நான் எனது தாயாருக்காக வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். அவர் எனக்கு மட்டும் தாயல்ல, உங்கள் எல்லோருக்கும் தாய், உங்கள் தாயாருக்கு உதவுவீர்களா? பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானை தனது காலடியில் விழ வைத்தார், அவர் எப்போதும் உங்களுடனே இருப்பார். நீங்கள் மெகா கூட்டணிக்கு வாக்களிப்பது பாகிஸ்தானுக்கு வாக்களிப்பது போன்றது. ராம பக்தர்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாவத்தால்தான், முலாயம் சிங் யாதவை அவரது சொந்த மகன் அகிலேஷ் யாதவ் வீட்டை விட்டு வெளியேற்றினார்.
விரைவில் மக்களும் வெளியேற்றுவார்கள். 15 முதல் 20 வருடங்களுக்கு முன் சைக்கிளில் சென்று சாணி அள்ளிய முலாயம் குடும்பத்தார், இன்று 5 கோடி மதிப்பிலான கார்களில் சொகுசாக சுற்றுகிறார்கள், பாக்கெட்டை நிரப்புவது மட்டுமே அவர்களின் நோக்கம். நான் கடவுளை தவிர யாருக்கும் பயப்படமாட்டேன், சஞ்சய் காந்தியின் மகன் நான். இவ்வாறு வருண் பேசினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி