சாய்பாசா: ‘‘பழங்குடியினரின் வனம், நிலம் மற்றும் தண்ணீருக்கு பாதுகாப்பு அரணாக காங்கிரஸ் கட்சி இருக்கும்’’ என ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிங்க்புவாம் (எஸ்டி) மக்களவை தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளர் கீதா கோடாவை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:காங்கிரசை நீங்கள் வெற்றி பெறச் செய்தால், பழங்குடியினரின் வனம், நிலம் மற்றும் தண்ணீரை பாதுகாக்கும் அரணாக நாங்கள் இருப்போம். ஏழைகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் நியாய் திட்டமானது, நாட்டிலிருந்து ஏழ்மையை விரட்டியடிக்க நடத்தப்படும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆகும். இத்திட்டத்தின் கீழ் ஏழைகள், விவசாயிகள், பழங்குடியினர், சிறு வர்த்தகர்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுதோறும் ரூ.72,000 நேரடியாக டெபாசிட் செய்யப்படும்.
மேலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், காலியாக உள்ள 22 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். காங்கிரஸ் ஆட்சியில் பழங்குடியினரின் நலன் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இத்தொகுதியில் போட்டியிடும் கீதா கோடா, ஜார்க்கண்டின் முன்னாள் முதல்வர் மது கோடாவின் மனைவி ஆவார். இவரை எதிர்த்து பாஜ எம்பியும், மாநில பாஜ தலைவருமான லட்சுமன் கில்லா போட்டியிடுகிறார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி