×

திறமையை நிரூபிக்க அவகாசம் கேட்கும் ரிஷப் பண்ட்

டெல்லி: திறமையை நிரூபிக்க தனக்கு கால அவகாசம் வழங்குமாறு இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியை சேர்ந்த இளம் வீரர் ரிஷப் பண்ட்  சமீப காலங்களில் தோனிக்கு மாற்று வீரராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். ஒரு சில போட்டிகளில் களமிறங்கினாலும் அப்போட்டிகளில் சோபிக்க தவறினார். இதன் காரணமாக இவரது பெயர் உலககோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. இவரது இடத்தை தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தட்டிச்சென்றார். தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டியிலும் இவரது பேட்டிங் எதிர்பார்த்த அளவு இல்லை என்றே கூறலாம்.

ஒரு சில போட்டிகளில் அதிரடியாக ஆடினாலும், போட்டியின் தன்மைக்கு ஏற்ப அவர் விளையாடுவதில்லை என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். நல்ல பேட்டிங் திறமை கொண்ட ரிஷப் பண்ட், போட்டியின் சூழலுக்கு ஏற்ப விளையாடாமல் தேவையற்ற ஷாட்டுகளை விளையாடி அவுட் ஆவதாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.  இந்நிலையில், தன் மீதான விமர்சனத்திற்கு பதிலளித்த ரிஷப் பண்ட், தனக்கு தற்போது 21 வயதுதான் ஆகிறது எனவும், முதிர்ச்சியான கிரிக்கெட் வீரராக களத்தில் நடந்துகொள்ள தனக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rishabhunta , Rishab pant, Delhi, World Cup
× RELATED ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி; ரிஷப் பன்ட் சதம் விளாசல்...