×

இன்று உலக ஆஸ்துமா தினம்: ஆண்டுக்கு 57,000 பேர் இறப்பு

உலகளவில் சுமார் 300 மில்லியன் ஆஸ்துமா நோயாளிகள் உள்ளதாக ஜெனிவாவில் உள்ள சுகாதார ஆய்வு நிறுவனம் கூறுகிறது... இந்தியாவில் சுமார் 15 முதல் 20 மில்லியன் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயினால் 4 முதல் 20 சதவீதம் பேர் வரை வெவ்வேறு இடங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்... இதில் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். அதிலும், கிராமப்புறங்களில் இருந்து நகரங் களுக்கு குடிபெயறும் குடும்பங்களில் உள்ள குழந்தை களுக்கு தான் ஆஸ்துமா தாக்கம் அதிகமாக இருப்பதாக ஆய்வு அறிக்கைககள் கூறுகின்றன.

உடற்பயிற்சியின் போது ஏற்படும் ஆஸ்துமாவானது 50 சதவீதம் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. 2004ம் ஆண்டிற்கான ஆய்வின்படி 57,000 பேர் ஆண்டுதோறும் இறப்பதாக கூறுகின்றன. ஒரு லட்சம் மக்கள் தொகையில் 5ல் 1 பகுதியினர் ஆண்டுதோறும் ஆஸ்துமா நோயினால் இறக்கின்றனர். அனைத்து காரணங்களால் ஏற்படும் மரணங்களால் 2 சதவீதம் பேர் தான். ஆனால் அதிக மாக நோயின் தாக்கம் திரிபுரா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தான் ஏற்படுகிறது...

தமிழ்நாட்டில் சுமார் 1லட்சம் பேரில், 1000 பெண்களுக்கும், 1000 முதல் 2000 வரை ஆண்களுக்கும் ஆஸ்துமா பாதிப்பை ஏற்படுத்துவதாக 2005ம் ஆண்டிற்கான ஆய்வு அறிக்கையை உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.. ஆஸ்துமா நோய் மனித இனத்தையே ஆட்டிப்படைக்கும் நோய். இதில் பலவகைகள் இருந்தாலும் உள் இயல்பான ஆஸ்துமா, புறவழி ஆஸ்துமா, மருந்து களால் ஏற்படும் ஆஸ்துமா, தொழில் வகையால் ஏற்படும் ஆஸ்துமா என முக்கியமான 4 வகைகளை மட்டும் காணலாம்.... இதுகுறித்து டாக்டர் கமல் கூறுகையில், இயல்பான ஆஸ்துமா குழந்தை பருவத்திலேயே வரக் கூடியது. பரம்பரை காரணங்களால் வரலாம். பெண்களுக்கு அதிகமாக வரும். குடும்பத்தில் ஒருவருக்கு ஆஸ்துமா வந்து விட்டால் மற்றவர்களுக்கும் வராது. புறவழி ஆஸ்துமா அலர்ஜியை ஏற்படுத்தக்கூடிய வெளி பொருட்களால் ஏற்படக்கூடியது. இது அதிகமாக ஆண்களை பாதிக்கிறது. குடும்பத்தில் ஒருவருக்கு வந்து விட்டால் மற்றவர்களுக்கும் எளிதில் பரவக்கூடியது. பெரும்பாலும் நடுத்தர வயதினரை பாதிக்கிறது.

மருந்துகளால் ஏற்படக்கூடிய ஆஸ்துமா ஒருவர் ஏதாவது நோய்க்கு மருந்துகள் எடுத்துக் கொள் ளும் போது அதனால் அலர்ஜி ஏற்பட்டு ஆஸ்துமா நோய் வருகிறது. உடல், எடை, மருந்தின் அளவு மற்றும் பொருள்களின் தன்மையை பொருத்து ஆஸ்துமாவின் தாக்கம் இருக்கும். ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் இதற்கு உதாரணங்களாகம். ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் அனை வருக்கும் வரக்கூடியது. தொழிலால் ஏற்படக்கூடிய ஆஸ்துமா செய்யும் தொழில் தெய்வம் என்பார்கள். ஆனால் சிலருக்கு அத்தொழிலே ஆஸ்துமா நோயை உருவாக்கி விடுகிறது. பஞ்சாலை தொழிலாளர்கள், புகைப்பட ஊழியர்கள், மாவு அரைக்கும் தொழிலாளர்கள், பேக்கரியில் வேலை செய்பவர்கள், பிளாஸ்டிக் தொழில் செய்பவர்கள், சாயப்பொருட்களை தயாரிப்பவர்கள், கல் உடைக்கும் தொழிலாளர்கள், விமானத்தில் பணிபுரிபவர்கள் , கோழிப்பண்ணையாளர்கள், கால்நடை மருத்துவர்கள், தச்சு வேலை செய்பவர்கள், நெசவாளர்கள் போன்றோர்களை இந்நோய் தாக்கும்.

தொழில் முறையில் தாங்கள் வேலை பார்க்கும் இடம் மற்றும் பயன்படுத்தப்படும் பொருட்கள், சுற்றுசூழல் போன்ற காரணங்களால் ஆஸ்துமாவினால் பாதிக்கப்படுகிறார்கள்.ஆஸ்துமாவிற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது அலர்ஜி அல்லது ஒவ்வாமை ஆகும். சிலருக்கு ஒத்துக் கொள்ளாத பொருட்களை சாப்பிட்ட உடனேயே அல்லது சுவாசித்த உடனேயே உடலில் மாற்றங்கள் ஏற்படும் இதைத்தான் அலர்ஜி என்கிறோம். அலர்ஜி பொருள் உடலுக்குள் சென்றதும் அவற்றை உடல் திசுக்களில் உள்ள எதிர்ப்பு பொரு ட்கள் எதிர்க்கின்றன. அலர்ஜி பொருளுக்கும், எதிர் பொருளுக்கும் சண்டையே நடக்கும் இதைத்தான் ஆன்ஜென் ஆன்டிபாடி செயல்பாடு என்கிறார்கள். இதனால் திசுக்களில் இருந்து ஹிஸ்டமின், பிராடி கைனின், கைனின் போன்ற பொருள்கள் வெளியேற்றப்படுகின்றன. இவைத் தான் மூச்சுக்குழாய்களின் இறுக்கத்தையும், பிடிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. மேலும் தும்மல், மூக்கில் இருந்து நீர்வடிதல், கண்நோய் ஏற்படுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : deaths , World Asthma Day
× RELATED கோட்டா பயிற்சி மையத்தில் படித்த...