×

கடனை திருப்பி கேட்டு தொல்லை வாலிபர் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

திருவொற்றியூர்: கடனை திருப்பிக் கேட்டு தொல்லை செய்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். மாத்தூர் எம்எம்டிஏ பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவர், அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் (47) என்பவரிடம் தனது குடும்ப செலவுக்காக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அதை குறித்த நேரத்தில் திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கடனை திரும்பி கேட்டு தேவராஜ் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த மனோகரனின் மகன் விஜய் (20), நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து மாதவரம் பால்பண்ணை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, விஜய்யின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே விஜய் வீட்டுக்கு வந்த உறவினர்கள், கடனை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்ததால்தான் விஜய் தற்கொலை செய்துகொண்டார். எனவே, கடனை திரும்பி கேட்டு தொல்லை கொடுத்த தேவராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, 50க்கும் மேற்பட்டோர் எம்எம்டிஏ சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். மாதவரம் பால்பண்ணை போலீசார், அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : suicide ,road ,relatives , Debt, harassment, youth, suicide
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...