திருமலை: ஆந்திராவில் 175 சட்டப்பேரவை தொகுதிகள், 25 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 11ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் பல்வேறு காரணங்களால் 5 வாக்குச்சாவடி மையத்திற்கு மறுவாக்கு பதிவு நடத்த வேண்டும் என குண்டூர், நெல்லூர், பிரகாசம் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் முதன்மை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்தனர்.அதன்படி நெல்லூர் மாவட்டத்தில் 2, குண்டூர் மாவட்டத்தில் 2, பிரகாசம் மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடி மையத்தில் நேற்று மறுவாக்குப்பதிவு நடந்தது. மிகவும் பதற்றமான இந்த வாக்குச்சாவடி மையங்களில் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி