×

தமிழகம் முழுவதும் ரம்ஜான் நோன்பு இன்று தொடக்கம்

சென்னை: தமிழகம் முழுவதும் ரம்ஜான் நோன்பு இன்று தொடங்குகிறது.இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ரம்ஜான் நோன்பு. ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் இஸ்லாமியர்கள் நோன்பிருப்பது வழக்கம்.  ஷவ்வால் மாதம் 29ம் நாளில் வானில் தோன்றும் பிறையை வைத்து ரம்ஜான் நோன்பு  தொடங்கப்படும். அவ்வாறு பிறை தென்படாத சூழலில் மறுநாள் முதல் நோன்பை  தொடங்குவார்கள். இந்நிலையில், ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை  சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் காணப்படவில்லை.எனவே 7ம் தேதி(இன்று) முதல் நோன்பு தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமை காஜி முப்தி முகமது சலாவுதீன் அயூப் அறிவித்திருந்தார். அதன்படி ரம்ஜான் ேநான்பு இன்று தொடங்குகிறது. இதையொட்டி அனைத்து பள்ளிவாசல்களிலும் தராவீஹ் என்ற சிறப்பு தொழுகை நடைபெறுகிறது.

30 நாட்களிலும் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து 5 வேளை தொழுகை செய்வார்கள். மாலையில் நோன்பு திறக்கப்படும். தமிழகம் முழுவதும் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஷஹர் என்ற உணவு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் ஷஹர் என்ற உணவு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ramanan ,Tamilnadu , Tamilnadu, Ramzan fast, beginning
× RELATED தமிழ்நாட்டில் நாளுக்கு நாள்...