சென்னை: தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எந்த கல்லூரிகளிலும் அவருக்கு பணி வழங்க கூடாது என அண்ணா பல்கலை பதிவாளர் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆசிரியர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டதாக புகார் மனுவில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை மீது தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரி கூட்டமைப்பு சார்பில் புகார் தரப்பட்டதால், பொறியியல் கல்லூரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி