×

பொன்னமராவதி கொந்தளிப்பு அவதூறு வீடியோ உருவாக்கிய 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

புதுக்கோட்டை: மக்களவை தேர்தலின்போது ஒரு சமூகத்தினரை அவதூறு செய்யும் வகையில் வெளியான வீடியோ புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்ததில், இந்த வீடியோவை சிங்கப்பூரில் இருந்து உருவாக்கிய செல்வகுமார் (34),  வசந்தகுமார்(30),  சக்தி என்ற சத்தியராஜ்(30), ரெங்கையா(45) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து  சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய செல்வகுமார், வசந்தகுமார், சத்தியராஜ், ரெங்கையா ஆகிய நான்கு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்பி செல்வராஜ் பரிந்துரையின்படி கலெக்டர் உமாமகேஸ்வரி  உத்தரவிட்டார். இதன்பேரில் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த விவரம் திருச்சி மத்திய சிறைக்கு தெரிவிக்கப்பட்டது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ponnamaravathi , Ponnaravarathi, tension, ,video created Kundas falls , 4 people
× RELATED 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து...