×

பாலியல் புகார் சம்பவம் ரியல் எஸ்டேட் அதிபர் ஜாமீன் பெற முயற்சி

ஈரோடு:  ஈரோடு வில்லரசம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆர்கே என்ற ராதாகிருஷ்ணன் (37). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் மீது கடந்த 26ம் தேதி கல்லூரி மாணவி ஒருவர், தன்னை பாலியல் பலாத்காரம் செய்து, செல்போனில் வீடியோ  எடுத்து 4 ஆண்டாக மிரட்டி உடல் உறவு வைத்துக்கொண்டதோடு, நண்பர்களின் ஆசைக்கும் இணங்கும்படி கட்டாயப்படுத்தியதாக புகார் அளித்தார்.

இதன்பேரில், ஈரோடு மகளிர் போலீசார் ராதாகிருஷ்ணன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து  கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதற்கிைடயில், ராதாகிருஷ்ணன் தனது தந்தை மற்றும் நண்பர்கள் மூலம் ஜாமீன் பெற நடவடிக்கை எடுத்துள்ளார். ராதாகிருஷ்ணன் மீது மேலும் பல பெண்கள் புகார் செய்து வழக்கு  பதிவு செய்யப்பட்டால் ஜாமீன் பெறுவது கடினமாகி  விடும் என்பதால் இப்போதே ஜாமீன் பெற முயற்சி செய்து  வருகிறார் என கூறப்படுகிறது. இதற்கிடையே  ராதாகிருஷ்ணனை காவலில் எடுத்து விசாரணை நடத்துவோம் என போலீசார் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : complaint incident , Sexual ,complaint ,,bail
× RELATED யானை தாக்கி விவசாயி பலி