×

வேலியே பயிரை மேய்ந்த சம்பவம் தண்ணீர் பந்தலில் டம்ளரை திருடி சென்ற ரோந்து போலீஸ்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டை தடுக்க இரவு நேரங்களில் போலீசார் ரோந்து சென்று அதிரடி சோதனை நடத்துகின்றனர். இதேபோல் ஆலங்குடி அருகே கீரமங்கலம் பகுதிகளில் போலீசார் பைக்குகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு ரோந்து வரும் 2 போலீசார், கீரமங்கலம் பகுதியில் உள்ள தண்ணீர் பந்தலில் தாகத்துக்காக வைக்கப்பட்டுள்ள தண்ணீர்  பானையில் உள்ள  டம்ளரை திருடி செல்லும் வீடியோ காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிசிடிசி கேமராபதிவில், இரவு நேரத்தில் இரண்டு போலீசார் ஒரு பைக்கில் வருகின்றனர். அவர்கள் கடைமுன் பைக்கை நிறுத்துகின்றனர். ஒருவர் பைக்கில் உட்கார்ந்திருக்க மற்றொரு போலீஸ்காரர் கடையில் உள்ள குடிநீர்  பானையிலிருந்த டம்ளரை எடுத்துக்கொண்டு பைக்கில் ஏறுகிறார்.

பின்னர் இருவரும் பைக்கில் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. திருட்டு போன்ற குற்றச்செயல்கள் குறித்து ெபாதுமக்கள் புகார் ெகாடுத்தால் போலீசார் நடவடிக்கை எடுப்பர். ஆனால் கீரமங்கலம் பகுதியில் போலீசாரே டம்ளரை திருடினால் நாங்கள் எங்கே போய் சொல்வது என இளைஞர்கள்  புலம்புகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Valliyyude ,plant incident ,water pudding Patrol Police , Muddy , water, Stole Patrol, Police
× RELATED பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த...