×

இயற்கை சிகிச்சை எடுத்துக்கொண்ட குமாரசாமியை குட்டிராதிகாவுடன் மார்பிங் செய்து புகைப்படம் வெளியீடு: 2 வாலிபர்கள் கைது

பெங்களூரு: கர்நாடக முதல்வர் குமாரசாமி சிகிச்சையின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன்  குட்டிராதிகா இருப்பது போன்று மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிட்ட  இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கர்நாடகாவில்  மக்களவை தேர்தல் இரு கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், கடந்த 6  நாட்களுக்கு முன் முதல்வர் குமாரசாமி மற்றும் அவரது தந்தை முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோர் உடுப்பியில் உள்ள ரிசார்ட்டில்  தங்கியிருந்து இயற்கை  மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டனர். அங்கிருந்து நேற்று பெங்களூருவுக்கு  திரும்பினர். இந்நிலையில் இணையதளத்தில் முதல்வர் குமாரசாமி  மற்றும் நடிகை குட்டி ராதிகா ஆகியோர் உடுப்பி ஓட்டலில் தங்கியிருப்பதாக  செய்தி வெளியிட்டு, இருவரும் இணைந்திருப்பது போன்ற புகைப்படத்தையும்  ஏப்.24ம் தேதி மர்மநபர்கள்  வெளியிட்டிருந்தனர். இதுகுறித்து முதல்வரின் பத்திரிகை செயலாளர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடிவந்தனர். இதுதொடர்பாக பாகல்கோட்டையை சேர்ந்த கங்காதர்(30) மற்றும் உடுப்பியை சேர்ந்த  அஜீத் ஷெட்டி ஹெரஞ்சே(35) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். சாப்ட்வேர்  இன்ஜினியரிங் படித்துள்ள கங்காதர் வெப்ேபார்ட்டல்  நடத்தி வருவது  தெரியவந்தது. அஜீத் ஷெட்டி உடுப்பியில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனத்தில்  பணியாற்றி வருகிறார். முதல்வர் குமாரசாமி உடுப்பி ரிசார்ட்டில் தங்கி  இயற்கை சிகிச்சை எடுத்துக்ெகாண்ட புகைப்படத்தை மார்பிங் செய்து,  குட்டி  ராதிகாவுடன் இருப்பதுபோல கங்காதர் தனது முகநூலில் வெளியிட்டிருப்பது  தெரியவந்தது. கங்காதர் மற்றும் அஜீத் ஷெட்டி ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Photographer ,men , Natural, ,Kuttarriga, Photographing,arrested
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்