×

அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்

புதுடெல்லி: அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இமயமலை உச்சியில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலில் பனிலிங்கத்தை தரிசிக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்டுதோறும் பக்தர்கள் புனிதப்பயணம் செல்கின்றனர். இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி  வரை அமர்நாத் யாத்திரை நடைபெற உள்ளது. வழக்கமாக ஜம்மு காஷ்மீரில் கந்தர்பால் மாவட்டத்தில் பகல்காம் மற்றும் பல்தால் பகுதியில் இருந்து யாத்திரை செல்வார்கள்.  இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக ராணுவம், எல்லை பாதுகாப்பு படை, சிஆர்பிஎப் மற்றும் சிஏபிஎப் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Amarnath Pilgrim , Amarnath, Pilgrim, Security, Organize ,intensity
× RELATED ஆந்திர மாநில புதிய டிஜிபி பொறுப்பேற்பு