×

எடப்பாடி ஆட்சியை காப்பாற்ற ஒரு ஓட்டுக்கு 20 ஆயிரம்: டி.டி.வி தினகரன் புகார்

செய்துங்கநல்லூர்: எடப்பாடி ஆட்சியை காப்பாற்றுவதற்காக ஒரு ஒட்டுக்கு ரூ.20 ஆயிரம் வரை கொடுக்க தயாராக உள்ளார்கள் என்று செய்துங்கநல்லூரில் நடந்த பிரசாரத்தில் டிடிவி  தினகரன் பேசினார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி  அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜை ஆதரித்து அக்கட்சியின் பொதுசெயலாளர் டி.டி.வி தினகரன் செய்துங்கநல்லூரில் பிரசாரம் செய்தார்.  

அப்போது அவர் பேசியதாவது: ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சுந்தர்ராஜை    பதவி நீக்கம் செய்ததால்  தற்போது இடைத்தேர்தல் வந்துள்ளது.   எடப்பாடி முதல்வராக வாக்களித்தவர் சுந்தர்ராஜ். தற்போது அவர் பதவியை இழந்து உங்கள் முன்பு நிற்கிறார். இரட்டை இலை சின்னம்   துரோகிகள் கையில்  இருக்கும் போது  எப்படி வெற்றி கிடைக்கும்.  இடைத்தேர்தலில் தங்களது ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள ஓட்டுக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை கொடுக்க தயாராக உள்ளார்கள். இந்த இடைத்தேர்தலில் எடப்பாடியை வீட்டுக்கு அனுப்ப நீங்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DVV Dinakaran ,Edappadi , Edapati, DTV Dinakaran, complains
× RELATED அன்னையர் தினம் எடப்பாடி வாழ்த்து