மீனம்பாக்கம்: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று விமானம் ஒன்று புறப்பட இருந்தது. இதில் பயணம் செய்ய வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, கேரளாவை சேர்ந்த குஞ்சு முகமது (44) என்பவர், மலேசியாவுக்கு சுற்றுலா பயணியாக வந்தார். சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் அவரது உடமைகளை சோதனை செய்தபோது சூட்கேசில் வெளிநாட்டு கரன்சிகள் இருந்தது. அவரிடம் இருந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள கரன்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி