×

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்பது உண்மையில்லை, இன்று வெளியாகாது; சி.பி.எஸ்.இ செய்தி தொடர்பாளர் ராமா சர்மா அறிக்கை

டெல்லி: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளதாக வந்த செய்திக்கு சி.பி.எஸ்.இ மறுப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பிப்ரவரி 2-ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. அதில் 27 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.. www.cbseresults.nic.in மற்றும் cbse.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவை அறிந்துகொள்ளலாம். சிபிஎஸ்இ இணையதளங்களின் முகப்பு பக்கத்தில் ‘‘பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு 2019’’ என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

அதைத்தொடர்ந்து மாணவர்களின் பதிவு எண், பள்ளி ரோல் நம்பர், ஹால்டிக்கட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை பதிவேற்றம் செய்து சப்மிட் பட்டனை அழுத்த வேண்டும். அதைத்தொடர்ந்து மாணவரின் தேர்வு முடிவு  திரையில் தோன்றும். அதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். சிபிஎஸ்இ பிளஸ்2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 3-ம் வாரத்தில் வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டிருந்தது. ஆனால் சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வுகள் முன்கூட்டியே மே 2-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் சி.பி.எஸ்.இ செய்தி தொடர்பாளர் ராமா சர்மா வெளியிட்ட அறிக்கையில், சி.பி.எஸ்.இ 10--ம் வகுப்பு பொதுச்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்பது உண்மையில்லை, இன்று வெளியாகாது; சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். பொதுச்தேர்வு முடிவுகள் தேதி குறித்து சி.பி.எஸ்.இ விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rama Sharma ,CBSE , Class 10, Exam Results, CBSE spokesperson Rama Sharma, reported
× RELATED விருகம்பாக்கம் பாலலோக் சிபிஎஸ்இ...