×

மன்மோகன் சிங் 5 முறை துல்லிய தாக்குதல் நடத்தியுள்ளார் ராணுவ நடவடிக்கைகளை வைத்து பாஜவினர் அரசியல் செய்கின்றனர்

சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 5 முறை துல்லிய தாக்குதல் நடத்தியுள்ளார். ஆனால் ராணுவ நடவடிக்கைகளை வைத்து பாஜவினர் அரசியல் செய்கின்றனர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: சட்டசபை தலைவர் எடுத்திருப்பது மிக பெரிய ஜனநாயக படுகொலை. எம்எல்ஏக்கள் தற்போது அதிமுகவில்தான் இருக்கிறார்கள். அவர்கள் கட்சிக்கு எதிராகவோ, ஆட்சிக்கு எதிராகவோ பேசவில்லை. கடந்த காலங்களில் பேசியிருந்தால் அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தோல்வி பயத்தின் காரணமாக இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளனர். மக்களுடைய வரிப்பணம் இதனால் வீணாகிறது. இது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. தோல்வி பயத்தால் உயிருக்கு ஆபத்து என மோடி கூறுகிறார்.

கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் இத்தனை திட்டங்கள் நிறைவேற்றியுள்ளோம் என கூறி வெற்றி பெற முடியாத காரணத்தினால் தனிப்பட்ட பிரச்னையை பேசுகிறார். கொள்கையை சொல்லி பிரசாரத்தில் ஈடுபட தயாராக இல்லை. முக்கியமான பிரச்னைகளை திசை திருப்புவதுதான் தேர்தல் யுக்தி. காங்கிரஸ் ஆட்சியில் 5 முறை துல்லிய தாக்குதல் நடைபெற்றதாக தேதி வாரியாக மன்மோகன் சிங் கூறியுள்ளார். ராணுவ நடவடிக்கைகளை வெளியே சொல்ல கூடாது. அதுவே அரசியல் நடைமுறை. ராணுவ நடவடிக்கைகளை வைத்து அநாகரிக அரசியல் செய்கிறார்கள் பாஜகவினர். இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

விதண்டாவாதம் வேண்டாம்

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: மத்தியில் பாஜ ஆட்சி அமைந்தவுடன் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது என்கிற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது. 2015 முதல் 2018 வரை இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து நிவாரணம் வழங்க ஐந்து தவணைகளில் தமிழக அரசு ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரத்து 450 கோடி நிவாரண தொகை கேட்டது. ஆனால் மோடி அரசு தமிழகத்திற்கு வழங்கியதோ வெறும் ரூபாய் 3 ஆயிரத்து 700 கோடி மட்டுமே. மோடி அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு வஞ்சிக்கிறது என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் தேவையில்லை.இதனால் தான் நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமதே, நாளையும் நமதே என்கிற இலக்கை நோக்கி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி நடைபோட்டு வருகிறது. இதை தாங்கிக் கொள்ள முடியாத தமிழிசை வாதங்களை முன்வைக்க வேண்டுமே தவிர, விதண்டாவாதங்களை முன்வைக்க வேண்டாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manmohan Singh ,precursor attack , Manmohan Singh, conducted a five-time ,precursor attack, political activities
× RELATED மக்கள் நல திட்டங்களை...