×

இளம்பெண்ணிடம் முகச்சவரம் செய்து கொண்ட சச்சின் டெண்டுல்கர்

மும்பை: உத்தரப் பிரதேசத்தில் உள்ள பன்வாரி தோலா என்ற கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகள் நேஹா மற்றும் ஜோதி. இவர்களது தந்தை சலூன் ஒன்றை நடத்தி வந்தார். கடந்த 2014ம் ஆண்டு தந்தையின் உடல்நிலை  பாதிக்கப்பட்டு அவர் படுத்தப் படுக்கையாகிவிட, நேஹா, ஜோதி இருவரும் தந்தை நடத்தி வந்த சலூனை தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டனர். அந்த கடைக்கு ‘பார்பர்ஷாப் கேர்ள்ஸ்’ என்ற பெயர் சூட்டி இப்போது சகோதரிகள் இருவரும் சலூனை நடத்தி வருகிறார்கள். சலூனில் இருந்து கிடைக்கும் வருமானத்தின் மூலம் தந்தையின் சிகிச்சை செலவை கவனித்துக்  கொள்வதுடன் வீட்டுச் செலவையும் சமாளித்து வருகின்றனர்.

சமீபத்தில் நேஹா, ஜோதி நடத்தி வரும் சலூனுக்கு சென்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அந்த கடையில் முகச்சவரம் செய்து கொண்டார். அவருக்கு மூத்த சகோதரியான நேஹா முகச்சவரம் செய்தார். இதைத்தொடர்ந்து  ஜில்லெட் நிறுவனம் சார்பில் சகோதரிகள் கல்வி மற்றும் தொழில் தேவைக்கான நிதியுதவியை சச்சின் டெண்டுல்கர் வழங்கினார். நேஹாவிடம் முகச்சவரம் செய்து கொண்டபோது எடுத்த படத்தை சச்சின் டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று முன்தினம் பதிவேற்றம் செய்தார்.இந்த பதிவுக்கு 7 லட்சம் லைக்குகள் அடுத்த சில மணிநேரத்தில்  கிடைத்தது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sachin Tendulkar , Teenager, face, Sachin Tendulkar
× RELATED ஹோலி பண்டிகை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!