திருமலை: ‘‘ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சியைப்பிடிக்கும் என்று சந்திரபாபு நாயுடு பேசினார். ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட தெலுங்குதேசம் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தலுக்கு முன்பு பொதுமக்களின் கருத்துகளை கேட்கப்பட்டது. நம் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் செய்த அனைத்து சதி செயலையும் சரியான முறையில் எதிர்கொண்டோம்.
மாநிலத்தை பின்னுக்கு தள்ள மோடி பல முயற்சிகளை மேற்கொண்டார்.
இதற்கு தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவும் துணையாக இருந்தார். மாநிலத்தில் ஜெகனுக்கு துணையாக மோடி, சந்திரசேகர ராவ் ஒருங்கிணைந்தனர். எத்தனை சிரமத்தைக் கொடுத்தாலும் பொது மக்கள் மட்டும் தெலுங்கு தேசம் கட்சி உடன் தான் உள்ளனர். மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு சதவீதம் குறைக்க வேண்டும் என பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சியை முறியடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு நான் அழைப்பு விடுத்திருந்தேன். இதன் காரணமாக பொதுமக்கள் நள்ளிரவில் கூட தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதனால் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெறுவதில் எந்த வித சந்தேகமும் இல்லை. எத்தனை இடங்களில் வெற்றி பெறுவோம் என்பது மட்டுமே சந்தேகம் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி