×

பல்வேறு இடங்களில் திருடுபோன 44 செல்போன்கள் மீட்பு

சென்னை: மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வந்தது.அவ்வாறு செல்போனை பறிகொடுத்தவர்கள் மயிலாப்பூர் காவல் நிலையத்தில், புகார் அளித்தனர். அதன்பேரில், கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் திருடுபோன செல்போன்களின் ஐஎம்இஐ எண்களை கொண்டு சோதனை மேற்கொண்டனர். அதில், கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்களை பயன்படுத்தி வருவோரின் விவரம் கிடைத்தது. அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 44 செல்போன்களை போலீசார் மீட்டனர். பின்னர், அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : locations , Recovered 44 mobile phones, stolen, various locations
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு