×

ஒடிசாவில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் நாளை நடைபெறுவதாக இருந்த நீட் தேர்வு ஒத்திவைப்பு

ஒடிசா: ஃபானி புயலால் ஒடிசாவில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் நாளை நடைபெறுவதாக இருந்த நீட் தேர்வு ஒத்திவைத்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மறு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. ஒடிசா தவிர பிற அனைத்து மாநிலங்களிலும் நாளை திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும்  என தெரிவித்துள்ளது. ஃபானி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் ஒடிசாவில் நீட் தேர்வை ஒத்திவைக்க ஒடிசா மாநில தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று ஒடிசா அரசு தேசிய தேர்வு முகமையிடம் நீட் தேர்வை ஒத்திவைக்க வலியுறுத்தியது. இதன் கோரிக்கையால் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nit Selection Adjournment ,institutions ,Odisha , Orissa, Educational Institutions, Neet Selection Adjournment
× RELATED அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள FPI...